வனவியல் தொழில்நுட்பங்கள்
நாற்றங்கால் தொழில்நுட்பம் முக்கிய மர இனங்களுக்குரிய நாற்றங்கால் தொழில்நுட்பம்

அறிமுகம்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு திடமான சுற்றுச்சூழல் பேணுவதற்கும், சமூதாய பொரளாதார மற்றும் கிராம முன்னேற்றங்களுக்கு, வனவியல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. வனங்கள், விறகு, தீவனம் சிறிய மற்றும் கட்டிடத்திற்கான தடி மரம் போன்ற பல்வேறு பொருள்களுக்கு பாரம்பரிய மூலதனமாகவும் மற்றும் பெறுபான்மையான மக்களுக்கு ஆதாரமாகவும் இருந்திருக்கின்றன. வனங்களால் கிராமப்புரங்களில் ஏற்படுத்தக்குடிய வேலை வாய்ப்புகளால் வரும் கிராம வருமானம் மற்றும் வருமை ஆற்றல் போன்ற வாய்ப்புகள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தடி மரம், விறகு, தீவனம் மற்றும் மற்ற பிற வனப்பொருட்களை சட்டவிரோதமாக அகற்றுவதால் நாட்டின் வனங்கள் பெரிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.
மாநில வனத்துறைகள், வனங்கள் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகளாக பல்வேறு காடு வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் திட்டங்கள் செயல்படுத்தினாலும் உரிய நேரத்தில் காடு வளர்ப்பு பகுதிகளுக்கு அருகிலேயே தரமான நாற்றுகள் கிடைப்பது மிகப் பெரிய தடையாக இருப்பதால் பரந்த அளவில் தனியார் நிலங்கள் தரிசு நிலங்களில் காடு வளர்ப்பது சிரமமாக இருக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும் :
அதிக அளவில் காடுகளை வளர்ப்பதற்கு நாற்றங்கால் அமைப்பதன் தேவை
பயனாளிகள்
இனத்தை தேர்வு செய்தல்
நாற்றங்கால் உத்தி
சாகுபடி செலவு
மேற்குறிப்பு: www.nabard.org